அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)

93

க.எண்: 2022090392

நாள்: 07.09.2022

அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.10, சென்னை தி.நகர்)

‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, வருகின்ற
10-09-2022 சனிக்கிழமையன்று மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

கொள்கை விளக்கப் பேருரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: தி.நகர் பேருந்து நிலையம் பின்புறம்,
முத்துரங்கன் சாலை,
தியாகராய நகர், சென்னை

நாள்: 10-09-2022 சனிக்கிழமை,
மாலை 04 மணியளவில்

 

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு