மூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான அன்புச்சகோதரர் சண்முகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகவுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசையானது காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.
சகோதரர் சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2) https://bit.ly/3U4gDL5


