நத்தம் தொகுதி – முற்றுகை போராட்டம்

444

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனை (country) செய்த பெண் நத்தம் பகுதி  கிராமங்களை பற்றி மிகக் கேவலமானமுறையில் கேலி செய்துள்ளார்  இதை அறிந்த *நாம் தமிழர் கட்சி* யின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர். முனைவர் *நத்தம் சிவசங்கரன்* அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி உறவுகள்  நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டதை தொடர்ந்து காவல்துறை , நிர்வாகத்திற்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி நிகழ்ச்சி வர்ணனையாளரை காவல் துறை மற்றும் TNPL நிர்வாகம் நிகழ்ச்சி தொகுக்கும் இடத்தில் இருந்து  வெளியேற்றினார்கள்..

 

முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.கூட்டம்‌
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு