சோழிங்கநல்லூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

199

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கத்தில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

சிறப்பாக நடைபெற்றது .தொகுதி நிர்வாகிகள் குருதிக் கொடை வழங்கினர்.

மண்டலச் செயலாளர் திரு இராஜன்,  மாவட்டச் செயலாளர் திரு மைக்கேல்,தொகுதித் தலைவர் திரு சசிக்குமார் அவர்களின் வழிகாட்டுதல் படி , மாநிலத் தகவல் தொழில் நுட்பப் பாசறைத் துணைச் செயலாளர் திரு இளங்கோ இராசன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரும்பாக்கம்,மேடவாக்கம்,191 வட்டம், 189 வட்டம்,190 வட்டம், சித்தாலப்பாக்கம்,வேங்கைவாசல், சோழிங்கநல்லூர் ஊரக/வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
தொகுதி துணைச் செயலாளர் திரு பாலசிங், ஊரக/வட்டச் செயலாளர்கள் பெரும்பாக்கம்  திரு இரா செல்வக்குமார், மேடவாக்கம் திரு மா இளங்கோ, வேங்கைவாசல் திரு திரிலோக நாதன், திரு கார்த்திகேயன், ஜல்லடையம்பேட் திரு ஹரிஷ் , முருகன் , பள்ளிக்கரணை திரு தங்கராசு , திரு சுப்ரமணியன்,  தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை திரு சதீஷ் ஆத்தியப்பன் , வணிகர் பேரவை திரு இரா செந்தில் குமார், காரணை திரு பீட்டர், கோவிலம்பாக்கம் அருணாச்சலம், சுற்றுச் சூழல் பாசறை பாலாஜி  ஆகியோர் கலந்து கொண்டு குருதிக் கொடை செய்து சிறப்புச் செய்தனர்.
பெரும்பாக்கம் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
முந்தைய செய்திவீரபாண்டி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா