பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

81

பனை விதை திருவிழா -2021 (17.10.2021) அன்று  பெரம்பலூர் மாவட்டம்,அறுமடல் கிளை நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் நிகழ்வானது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் திரு. வை. வேலுச்சாமி அவர்களின் முன்னெடுப்பில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குணம் ஏரிக்கரை பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பனைவிதைளை நடவு செய்யப்பட்டது.இந்நிகழ்விற்கு பெரம்பலூர் தொகுதி செயலாளர் திரு. பாலகுரு, தொகுதி தலைவர் திரு. முருகேசன், தொகுதி பொருளாளர் திரு. மணிகண்ட பிரபு, இணைசெயலாளர் திரு. பரமேசுவரன், மகளிர் பாசறை திருமதி. செல்லம்மாள், திருமதி. இரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு :

திரு. அசோக்குமார் ,செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
-90253 54415

திரு. சத்தியசீலன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
-9047196175

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாதாவரம் தொகுதி – பகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி 8 இடங்களில் புலிக்கொடி கொடியேற்றப்பட்டது.