தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

61

 

க.எண்: 2021090217

நாள்: 18.09.2021

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கோ.கார்த்தி (00314768534), கோ.கஜேந்திரன் (00314238196), பி.சதிஷ்குமார் (00314061962) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்களில் கோ.கார்த்தி, கோ.கஜேந்திரன் ஆகியோர் ஏற்கனவே அவர்கள் வகித்துவந்த கட்சிப் பொறுப்புகளிலேயே தொடர்வார்கள் எனவும், பி.சதிஷ் குமார் அவர்கள் கட்சி அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார் எனவும் அறிவிக்கப்படுகிறது

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான்