சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அரங்கேற்ற நிகழ்வு

13

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி பள்ளியில் பயின்றவர்களின் அரங்கேற்ற நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட பறையிசைப் பயிற்சி பள்ளியின் பத்தொன்பதாம் நாள் வகுப்பு சிறப்பாக நிறைவடைந்தது. பயிற்சியின் கடைசி நாளில் அங்கு பறையிசை பயின்றவர்கள் இராவணன் கலைப்பயிற்சி பட்டறை என்ற குழுவாக உருவாகி நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறவுகள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தனர்.
7904013811

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.