கேரள – கர்நாடகா மாநில எல்லையான மங்களூர் அருகே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகின் மீது கொரிய நாட்டுக்கப்பல் மோதியதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
(1/3)

மீன்பிடி விசைப்படகின் மீது கொரிய நாட்டுக்கப்பல் மோதிய விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
(3/3)
உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்; மத்திய அரசு மற்றும் கேரள-கர்நாடக மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்து, காணாமல் போன மேலும் 5 மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!


