திருச்சி மாநகர் மாவட்டம் – மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

141

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மண்டல செயலாளர் திரு.ஐயா சேது. மனோகரன் அவர்கள், மாநகர் மாவட்ட செயலாளர், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு.இரா பிரபு அவர்கள், தெற்கு மாவட்ட தலைவர் திரு.சுப.கண்ணன் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி நூர்ஜஹான் அவர்கள், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சோழசூரன் முன்னிலையிலும் மற்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் சேர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி- ஒன்றிய கலந்தாய்வு