15-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் தெரியாத வங்கி மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.