செந்தமிழ் நாட்டில் தமிழுக்கு நேர்ந்துள்ள இழிநிலையை எடுத்துரைத்து, அதனைக் காக்க வேண்டியதன் மகத்துவத்தைக் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்களின் அறச்சீற்றமும், உள்ளக்குமுறலும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்துகொள்ள வேண்டிய பெருஞ்செய்தியாகும்.
(1/2)

மொழியின் மீது பெரும் பற்றுகொண்டு உளப்பூர்வமாகக் கருத்துரைத்த ஐயாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதனை உணர்ந்து தெளிந்து மொழி மீட்சிக்குத் துணைநிற்க வேண்டுமென இளையத் தலைமுறை பிள்ளைகளுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
(2/2)


