மாதாந்திர தொகுதி கலந்தாய்வு – திருச்செந்தூர்

31

*நாம் தமிழர் கட்சி*
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.

மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நாள் : 05 – 09 – 2020.

இடம் : சட்டமன்ற தொகுதி அலுவலகம் திருச்செந்தூர்

1). கடந்த மாத நிகழ்வுகள் வரவு செலவுகள் செயற் களத்தில் ஏற்றப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

2). ஆறுமுகனேரி, நாசரேத், திருச்செந்தூர், காணம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் செயற்களத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டார்கள்.

3). தமிழக இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள, மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்துவதின் மூலம், நமது கொள்கைகள், தத்துவத்தை, அரசியல் செயற்பாட்டு வரைவுகளை சுமார் 700 இளைஞர்களிடம் கொண்டு செல்வது என்றும், அதன்மூலம் கட்சி உறுப்பினர்களை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு, தொகுதி விளையாட்டு பாசறையின் சார்பாக காயாமொழியில் மட்டைப்பந்து போட்டி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மட்டைப்பந்து போட்டியை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளராக.

வனசேகர் ( தொகுதி இணை செயலாளர்) தலைமையில்,

சத்யா (தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை)

அபூபக்கர் (செய்தி தொடர்பாளர் காயல்பட்டினம் நகராட்சி)

ரெட்சன் பிரபு.
மேலும் உறவுகளை இணைத்து கொண்டு சிறப்பாக செயல்படவும், வரவு செலவுகளை தொகுதிக்கு சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தலைமை :
உ . ஞானசேகர். தொகுதி தலைவர்.

முன்னிலை:
துரை அரிமா.
முன்னாள் தொகுதி தலைவர்.

கூட்ட விளக்கம் :
கி . பிரபு.
தொகுதி செயலாளர்.

தமிழர் தேசியத்திற்காக, கலந்து கொண்டு கடமையாற்றிய, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

*நாம்தமிழர்*

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

செய்தி பகிர்வு.

தொகுதி செய்தி தொடர்பாளர்.


முந்தைய செய்திஐயா இமானுவேல்சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு – சாத்தூர்
அடுத்த செய்திவீரவணக்க நிகழ்வு – நிலக்கோட்டை