நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 18/9/2020 ஏ.டி.சி. சுதந்திர திடலில் புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் 16/9/2020 அன்று நடைபெற்றது.