ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் இரண்டு மாத குழந்தை பிளவு உதடு குறைபாட்டில் அவதிப்பட்டு அதனால் தாய்ப்பால் கூட குடிக்க இயலாத நிலையில் உள்ளது. அக்குழந்தையின் தந்தைக்கு இந்த காலக்கட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் அதற்கான சிகிச்சைக்கு வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வர நிதி இல்லாது அந்த குழந்தைகளுக்கான சிகிச்சை தள்ளிக்கொண்டே போனதை அறிந்து நாம் தமிழர் கட்சி ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் கட்சியின் நிதியிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் நிதயுதவி அளிக்கப்பட்டது.