நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

75

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததில், தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனும் செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். அத்தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன். மேலும், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனியாவது தொழிலாளர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈரானில் சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசே பயணச்செலவை ஏற்கவேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திமே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? – சீமான் பேரழைப்பு