நாள்: 30/05/2020
கிழமை: சனிக்கிழமை
இடம் : நாமக்கல் அரசு மருத்துவமனை
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து திருமதி ரஞ்சிதா மற்றும் கௌதமி ஆகிய தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது கட்சியின் குருதிக்கொடை பாசறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நமது குருதிக்கொடை பாசறையில் இருந்து விவின், மணிகண்டன், கோகுல் ஆகியோர் குருதிக்கொடை வழங்கினர்.