அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

94

அறிவிப்பு: அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர் | நாம் தமிழர் கட்சி

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றிற்கு அரசின் அனுமதிபெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை – கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை, கடந்த 12-10-2018 அன்று தமிழக அரசு, மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக அனைத்து வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. வீடிழந்த நிலையில் இருக்க இடமின்றி ஆதரவற்று துயருற்று நிற்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 16-10-2018 செவ்வாய்க்கிழமை மாலை 03 மணியளவில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருகின்றது.

இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சசிகலா ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆ.ப.இப்ராஹீம், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பா.கிரிபாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ விடுதலை) சார்பில் இர.மோகன் ஆகியோர் பங்கேற்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகிறார்கள்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா – சீமான், அமீர் பங்கேற்பு
அடுத்த செய்திசென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்