திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு
காடு மலைகளை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை அமைத்திடும் திட்டத்தைக் கைவிடக்கோரி 04-06-2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றதற்காக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் இன்று 07-06-2018 வேலூர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகினர்.