நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் இளநீர் குடிக்கும் திருவிழா – கொளத்தூர் 23-03-2017

320

நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் இளநீர் குடிக்கும் திருவிழா – கொளத்தூர் 23-03-2017
==============================================
‘அந்நியக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்!
இயற்கைப் பானங்களைப் பருகிடுவோம்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து நுங்கு, இளநீர், பதநீர், கூழ் போன்ற இயற்கைப் பானங்களைப் அருந்துவதை ஊக்கப்படுத்தும்விதமாகவும், இயற்கைப் பானங்களை அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்விதமாகவும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் ‘இளநீர் குடிக்கும் திருவிழா’ நாளை 23-03-2017 (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் இளநீர் வழங்கி, இயற்கைப் பானங்களைப் பருகிட ஊக்கபடுத்தப்படும் இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்தார்
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்