கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களை கண்டித்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்புபோராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பேரணியில் தமிழர் உரிமைகளை மீட்க தன்னுயிர் ஈந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசுக்கு வீரவணக்கநிகழ்வும் நடைபெற்றது.