நாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை 29.9.2013 மாலை நடைபெற்றது. தன்மானம் சக்கரவர்த்தி கலைக்குழுவின் தமிழிசை ஆடல் பாடலோடு இக்கூட்டம் துவங்கியது. கட்சியின் இலட்சியங்களையும் கொள்கைகளையும், நாம் தமிழர் இம்மண்ணிக்குத் தேவை என்பதைப் பற்றியும் செல்வரத்தினம், இளந்தமிழன் சேக், நாகை அஞ்சம்மாள், ராமநாதபுரம் இலக்கியா, வழக்கறிஞர் உமர்கயான் , தமிழினியன், நீலமலை ஆனந்து, குமுதவல்லி, திலீபன் மற்றும் தமிழன் வடிவேல் ஆகியோர் விளக்கி உரையாற்றினார்கள்…
இக்கூட்டத்திற்கு அவினாசி ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.