கூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம்.

24

கூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம்.

முற்றுகயிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 111 போர் கைது செய்யப்பட்டனர்.

1.    ஆரசாணைப்படி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றியமைத்து முதண்மைப்படுத்த வேண்டும்.

2.    கொள்ளையர்களின் சூழ்ச்சியால் இடமாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர் மீண்டும் கூடலூர் நகராட்சிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

3.    அனுமதியின்றி, அத்துமீறி கட்டப்பட்டு வரும் தங்கமணி கட்டிடம் உட்பட அனைத்து கட்டிடங்களையும் இடிக்க நடவழக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.    சாலையோர காய்கறி கடைகளை உழவர் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5.    ஆறுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை இடித்து தள்ளி ஆறுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6.    கயவர்களுக்கு துணைபோகும் நகராட்சி அதிகாரிகள் தலைமை எழுத்தர் (Head Clark) தலைமை குடிநீர் இணைப்பாளர் (Head Fitter) நகராட்சி பொறியாளர் (M.E) வரி தண்டலர் (Bill Collector) ஆகியோர் பணி நீக்கம் செய்யயப்பட வேண்டும்.

7.    விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்றது.

முந்தைய செய்திநீலமலை மாவட்டம் கூடலூர் காந்தி திடலில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் உண்ணா நிலைப் போராட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.