மட்டக்களப்பு கல்குடாப் பகுதியில் விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
காவல்துறையினரை கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.
இதன்போதுஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனிடம் கல்குடா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.