பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல் நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது: பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து சென்னை தரமணி பறக்கும் இரயில் நிலையத்தில் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன் தலைமையில் இரயில் மறியல் போராட்டம் (22-01-13) நடைபெற்றது.இந்த இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தென் சென்னை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்,அருள் அரசு, கலியுகம், முருகன், சத்யா, பெருமாள்,பாபு,காவேரி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50 பேர் கைது செய்யப்பட்டு தரமணி காவல் நிலையத்தில் வைக்கபட்டனர்.