திடீர் ரயில் மறியல் – புதுவையில் பரபரப்பு

263
இன்று புதுவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா வரும் இன அழிப்பு போர்க்குற்ற வாளி ராஜபக்சேவைக் கண்டித்து இன்று நண்பகல் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையப் பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. அப்போது அங்கு வந்து சேர்ந்த காவலர்கள் நாம் தமிழர்களை கைது செய்ய முற்பட்டபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டதால் காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொண்டு சென்றனர்.

 

முந்தைய செய்திகடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்
அடுத்த செய்திராசபட்சே வருகையைக் கண்டித்து இராமநாதபுரத்தில் இரயில் மறியல்…