வரும் சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழாவினை நடத்தவிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. இனமான இயக்குனர் திரு. மணிவண்ணன் அவர்கள் பரிசளித்து பேருரை ஆற்ற உள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அன்பு தென்னரசன், திரு. சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
முகப்பு இந்தியக் கிளைகள்