தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.

39
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான கொளத்தூர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தங்கராசு,ஆவல் கணேசன், அமுதா நம்பி,சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் கயல்விழி, செல்வாரசு வழக்கறிஞர் மருதநாயகம்,அரிமா நாதன்,பக்தவச்சலம், மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட சென்னை தேவா, கௌரிசங்கர், சரவணன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
முந்தைய செய்திஅறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்
அடுத்த செய்தி30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் அழைப்பு.