கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார் ஐயா முத்துசாமி முருகேசன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
(1/2)

தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி ராஜேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா முத்துசாமி முருகேசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!
(2/2)


