ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு இன்று 22-01-2023 சென்னை வளசரவாக்கம், சுபிக்சா நிகழ்வரங்கத்தில் நடைபெற்றது.




முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.






