நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டம் – வடக்கு தொகுதிக்குட்பட்ட 18 வது வட்டத்தின் பொறுப்பாளர்கள் அன்புத்தம்பிகள் ஆதிராஜா, ஆனந்தராஜா, அசோக்ராஜா ஆகியோரின் தாயார், அன்பிற்கினிய அம்மா மா.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மா.ராணி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



