நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், இரும்பாடி ஊராட்சிப் பொறுப்பாளர் தம்பி தவமணி அவர்களின் மனைவி மாரியம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் தம்பி தவமணிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி மாரியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



