திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதி, வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கிளைத் துணைத்தலைவர் அன்புத்தம்பி சிவா அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சிவா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



