இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்!
கிறித்துவ பெருமக்களின் திருநாள்!
“அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்; அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தம்முடைய அருள் நிறைந்த அறவாழ்வால் வழிகாட்டிய இறைமகன் இயேசு பிரான் உலகம் உய்ய உயிர்த்தெழுந்த திருநாளான ‘உயிர்ப்பு ஞாயிறு’ பெருவிழாவினைக் கொண்டாடும் கிறித்துவப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும்,
அறியாமை இருள் அகன்று,
கொடிய வறுமை நீங்கி,
இறவாத இன்பம் நிறைந்து
இறையருள் பெருகட்டும்!
இறைமகன் இயேசுவின்
அன்பும் – அருளும்
இப்பூவுலகில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும்!
#Easter



