எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து
வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகின்ற ஆனி திங்கள் 20 ஆம் நாள் சூலை 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை
மாலை சரியாக 05 மணிக்கு
கடலூர் மாவட்டம்,
காட்டுமன்னார்கோயில்
(தாத்தா இளையபெருமாள் சிலை அருகில்)
நம்முடைய தாத்தாக்கள்
தமிழ்த்தேசிய அரசியலின் பேரொளி
தாத்தா கலியபெருமாள்
சமூக நீதிப் பெருங்காவலர்
தாத்தா ஆனைமுத்து
இருபெரும் ஆளுமைகளின் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
தமிழ்ப் பேரினத்தின் பெரியார்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



