நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் செஞ்சி தென்மேற்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி செல்வக்குமார் அவர்களின் தாயார் அம்மா ர.சுசிலா அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ர.சுசிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



