நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி
வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி த.ஜெயகாந்தன் அவர்களின் தாயார்
த.சாவித்திரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய அன்னையை இழந்துவாடும் அன்புத்தம்பி ஜெயகாந்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சாவித்திரி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



