நாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆதம்பாக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி பி.ராஜா அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி பி.ராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பி.ராஜா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



