முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி முத்துகணபதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த முத்துகணபதி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி முத்துகணபதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு,…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு…