நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் மண்டலம், சமூகரெங்கபுரம் மாவட்டச் செயலாளர் அன்புச்சகோதரர் மி. லாரன்ஸ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த சகோதரர் லாரன்ஸ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
சகோதரர் லாரன்ஸ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் மி.லாரன்ஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



