'வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது!' எனும் மாமேதை காரல் மார்க்சின் கூற்றுக்கிணங்க, வாழ்ந்து மறைந்திட்ட பெருந்தகை!
பொதுவுடைமைத் தத்துவத்தை ஏற்று, உண்மையும், நேர்மையுமாக உழைத்த மகத்தான மக்கள் தலைவர்!
பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பெருந்தொண்டு செய்திட்ட அப்பழுக்கற்ற பெருமகன்!
சாதிய ஒழிப்புக்காகவும், பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய களப்போராளி!
பெருந்தமிழர் எங்கள் ஐயா சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



