நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி நல்லான் அவர்களின் தந்தை ஐயா சண்முகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் நல்லான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சண்முகம் அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்!



