மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியினுடைய தமிழ் மீட்சிப் பாசறை இணைச் செயலாளரும், ஒப்பற்ற களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி செ.மணிகண்டன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



