நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருள் தாஸ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அருள் தாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
