நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.குமார் அவர்களின் அண்ணி அன்புச்சகோதரி வெண்ணிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பெருந்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி வெண்ணிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



