நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி முகேஷ் குமார் அவர்களின் தந்தை ஐயா ரவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி முகேஷ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



