நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறை மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி அரிமா மு.ப.செந்தில்நாதன் அவர்களின் அன்புச்சகோதரர் தம்பி திருச்செந்தூரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தம்பியை இழந்து வாடும் செந்தில்நாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி திருச்செந்தூரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



