நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி, செய்யாறு குமரன் தங்க மாளிகை மற்றும் குமரன் துணிக்கடை உரிமையாளரும், சிறந்த தொழிலதிபருமான ஐயா செல்வராஜ் அவர்களின் அன்புமகன் தம்பி செ.விக்னேஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய மகனை இழந்து வாடும் ஐயா செல்வராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி விக்னேஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



