தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு புனிதப்பயணம் சென்ற 45 இசுலாமியப் பெருமக்கள், மதினா நகர் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி மரணித்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அவர்களில் 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 18 இசுலாமியச்சொந்தங்கள் மரணித்துள்ளனர் என்ற துயரச்செய்தி இதயத்தை கனக்கச்செய்கிறது.
இப்பெருந்துயர நிகழ்வில் மறைவெய்திய இசுலாமியப்பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
உயிரிழந்த இசுலாமியப் பெருமக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



