முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு…

0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு புனிதப்பயணம் சென்ற 45 இசுலாமியப் பெருமக்கள், மதினா நகர் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி மரணித்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அவர்களில் 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 18 இசுலாமியச்சொந்தங்கள் மரணித்துள்ளனர் என்ற துயரச்செய்தி இதயத்தை கனக்கச்செய்கிறது.

இப்பெருந்துயர நிகழ்வில் மறைவெய்திய இசுலாமியப்பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

உயிரிழந்த இசுலாமியப் பெருமக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகுரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,௦௦௦ காலிப்பணியிடங்களையாவது நிரப்ப…
அடுத்த செய்தி‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!