முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட…

0

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, இளைஞர் பாசறையில் களப்பணியாற்றிவந்த ஜெயக்குமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா