நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தற்காப்புக் கலை வல்லுநர் ஆருயிர் தம்பி கராத்தே வினோத் அவர்களின் மனைவி கலைச்செல்வி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தனது உயிர்த்துணையை இழந்து, பேரிழப்புக்கு ஆளாகி நிற்கும் தம்பியின் நிலையறிந்து மனம் கலங்குகிறேன். தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை கலைச்செல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



